"நானும் டெல்டாகாரன்தான்".. காவிரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்க திட்டத்தை, தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது - முதலமைச்சர்

0 1397

காவிரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்க திட்டத்தை, தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச்சுரங்கம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் உரையாற்றினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மூலம் நிலக்கரி அமைச்சகத்திடம் முறையிட அறிவுறுத்தியதாகவும், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார். மேலும், முதலமைச்சராக மட்டும் கூறவில்லை, தானும் டெல்டாகாரன்தான் என்றும், இத்திட்டத்திற்கு அனுமதியளிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments